Friday, 28 September 2018

NALAIRA DIVYAPRABHANDAM நாலாயிரத் தமிழ் மணம் - ஆழ்வார்களைப் பற்றி

Sri:

நாலாயிரத் தமிழ் மணம் -  ஆழ்வார்களைப் பற்றி

1. பொய்கையாழ்வார் அவதரித்தவூர் காஞ்சியில் உள்ள திருவெஃகா நகரமாகும். இவர் பிறந்த திருநக்ஷத்ரம் ஐப்பசியில் திருவோணம். இவர் பொற்றாமரையில் ஒரு பூவில் பிறந்தமையால் அயோநிஜராகக் கொள்ளப்படுகிறார். இவர் பாடிய ப்ரபந்தம் முதல் திருவந்தாதியாகும்.

2. பூதத்தாழ்வார் அவதரித்தவூர் திருக்கடல்மல்லையாகும். தற்போது மஹாபலிபுரம் என வழங்கப்படுகிறது. இவர் பிறந்த திருநக்ஷத்ரம் ஐப்பசியில் அவிட்டம். இவர் ஒரு நீலோத்பல மலரில் பிறந்தமையால் இவரும் ஒரு அயோநிஜராவார். இவர் பாடிய ப்ரபந்தம் இரண்டாம் திருவந்தாதியாகும்.

3. பேயாழ்வார் அவதரித்தவூர் சென்னை மாநகரத்தில் உள்ள திருமயிலையாகும். இவர் பிறந்த திருநக்ஷத்ரம் ஐப்பசியில் சதயம். செங்கழுநீர் மலரில் பிறந்தமையால் இவரும் அயோநிஜரே. இவர் பாடிய ப்ரபந்தம் மூன்றாம் திருவந்தாதியாகும்.

வரிசையாக மூன்று நக்ஷத்ரங்களில் பிறந்த இம்மூவரும் முதலாழ்வார்கள் என அழைக்கப்படுகிறார்கள். நாலாயிரதிவ்யப்ரபந்தம் இவர்கள் மூலமாகவே எம்பெருமானால் தொடங்கப்பெற்றது. 

4. திருமழிசையாழ்வார் அவதரித்தவூர் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசையாகும். இவர் பிறந்த திருநக்ஷத்ரம் தையில் மகம். பார்கவ முநிகுமாரராகப் பிறந்தாலும் இவர் ஒரு பிரம்பறுப்பானால் வளர்க்கப்பெற்றவர். இவர் பாடிய ப்ரபந்தங்கள் பலவாயினும் இப்போது நமக்கு கிடைத்திருப்பது திருச்சந்தவிருத்தமும் நான்முகன் திருவந்தாதியும் மட்டுமே.

5. நம்மாழ்வார் அவதரித்தவூர் திருநெல்வேலியில் உள்ள ஆழ்வார் திருநகரி எனப்படும் திருக்குருகூர் ஆகும். இவர் திருநக்ஷத்ரம் வைகாசியில் விசாகம். காரியாருக்கும் உடையநங்கையார்க்கும் பிறந்த இவருக்கு சடகோபன், காரி மாறன், பராங்குசன், வகுளாபரணன் என்பது போன்ற பல திருநாமங்களுண்டு. இவர் திருக்குறுங்குடி எம்பெருமானான நம்பியின் அம்சமாகவே கருதப்படுகிறவர். இவர் பாடிய ப்ரபந்தங்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி மற்றும் திருவாய்மொழி. இவை நான்கு வேதங்களகவே கொண்டாடாப்படுகின்றன. வேதம் தமிழ் செய்த மாறன் என்றே இவர் அழைக்கப்படுகின்றார்.

6. குலசேகராழ்வார் அவதரித்தவூர் கேரள தேசத்தில் உள்ள கொல்லிநகர் (திருவஞ்சிக்களம்). இவர் திருநக்ஷத்ரம் மாசியில் புனர்பூசம். இவர் சேர குல அரசராக, குலசேகரன் என்ற திருநாமத்துடன் பிறந்தவர். குலசேகரப் பெருமாள் என்றும் இவரை அழைப்பர். இவருடைய ப்ரபந்தம் பெருமாள் திருமொழி என்று கூறப்படுகிறது.

7. பெரியாழ்வார் அவதரித்தவூர் திருவில்லிபுத்தூர் என்னும் ஸ்ரீவில்லிபுத்தூராகும். இவர் திருநக்ஷத்ரம் ஆனியில் ஸ்வாதி. விஷ்ணுசித்தர் என்பது இவருடைய இயற்பெயர். எம்பெருமான் மீது கொண்ட பரிவினால் இவர்க்கு பெரியாழ்வார் என்ற திருநாமம் அமைந்தது என்பர் மணவாள மாமுனிகள். வேதாந்த தேசிகனார் தம்முடைய கோதா ஸ்துதியில், தம் மகளான ஆண்டாளை எம்பெருமானுக்கு மணமுடித்து வைத்தமையால் இவர்க்கு பெரியாழ்வார் என்ற திருநாமம் அமைந்தது என்று பணித்துள்ளார். இவர் தாய் தந்தையர் பத்மா முகுந்த பட்டர் ஆவர்கள். இவருடைய ப்ரபந்தங்கள் திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழியாவன.

8. தொண்டரடிப்பொடியாழ்வார் திருமண்டங்குடி என்ற ஊரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் மார்கழியில் கேட்டை. விப்ரநாராயணர் என்ற பெயருடன் பூர்வசிகை ப்ராஹ்மண குலத்தில் பிறந்தவர். இவருடைய பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றி மட்டுமே அமைந்தன. திருவேங்கடமுடையானைப் பாடாத ஆழ்வார் இவர் ஒருவரே. இவருடைய ப்ரபந்தங்கள் திருமாலையும் திருப்பள்ளியெழுச்சியாமாவன.

9. திருப்பாணாழ்வார் திருவரங்கத்தருகே அமைந்த உறையூர் என்னும் நிசுளாபுரி அல்லது திருக்கோழி என்னும் ஊரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் கார்த்திகையில் ரோஹிணி. இவர் பாணர் குலத்தவர். இவருடைய ப்ரபந்தம் அமலனாதிபிரான் எனப்படும். லோகசாரங்கமுனிவர் மீது அமர்ந்து அரங்கம் வந்தமையால் இவருக்கு முநிவாஹனர் என்ற காரணப்பெயரும் உண்டு.

10. திருமங்கையாழ்வார் திருக்குறையலூரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் 
கார்த்திகையில் கார்த்திகை. இவர்க்கு நீலன், பரகாலன், திருமங்கை மன்னன் என்பது போன்ற பல பெயர்களும் உண்டு. இவர் கள்ளர் குலத்தவர். நான்கு வகையான கவிகளையும் (ஆசு கவி, சித்ரகவி, விஸ்தார கவி, மதுரகவி) பாட வல்லவராதலால் இவர்க்கு "நாலு கவிப்பெருமாள்" என்ற பெயரும் உண்டு. இவருடைய ப்ரபந்தங்கள் பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல் ஆவன. இவை வேதங்களின் ஆறங்கம் போன்றன என்பது பூர்வர்கள் வாக்கு.

11. மதுரகவியாழ்வார் திருக்கோளூரில் அவதரித்தவர். இவர் திருநக்ஷத்ரம் சித்திரையில் சித்திரை. தம் ஆசார்யனான நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்ட இவர் அவ்வாழ்வார் மீது கண்ணிநுண்சிறுத்தாம்பு என்ற ஒரு சிறு ப்ரபந்தத்தை மட்டும் இயற்றியவர். 

12. ஆண்டாள் என்னும் கோதை ஸ்ரீவில்லிபுத்தூரிலே திருவாடிபூரத்தில் அவதரித்தவர். இவர் பெரியாழ்வார் நந்தவனத்திலே துளஸியிலே கண்டெடுக்கப்பட்டவர். இவர்க்கு கோதை, ஆண்டாள், சூடிக்கொடுத்த நாச்சியார் என்பது போன்ற பல பெயர்கள் உள்ளன. ஆழ்வார்களிலே பெண்ணாய்ப் பிறந்தவர் இவர் ஒருவரே. இவர் இளம் பிராயத்தில் வழங்கிய திருப்பாவை உலகப்புகழ் பெற்றது. இவருடைய மற்றொரு ப்ரபந்தம் நாச்சியார் திருமொழி எனப்படும்.

SALIGRAM DEIVIKA SHAKTHI - 🌺சாளக்கிராமத்தின் தெய்வீக சக்தி 🌺

Sri:

 🌼சாளக் கிராமம் பூஜை செய்யும் முறை 🌼

மிகவும்   எளிமையாக  சாளக் கிராமத்திற்கு  பூஜை  செய்யும்  முறையை இன்றைய பதிவில் பார்க்கலாம். 

சாளக்கிராமத்தை 

          1. பன்னீராலும் , 
          2. பச்சைக்கற்பூரம்   கலந்த   நீராலும், 
          3. பாலாலும், 
          4. சந்தனத்தால், 
          5. அபிஷேக மஞ்சள் ,  
          6.  கரும்புச்சாறு  (இருந்தால்) , 
          7. அபிஷேக திரவியபொடி கலந்த நீர்
          8.  நெய் , தேன் மற்றும்   தயிராலும்,
          9.  விபூதி  கலந்த   நீராலும்,
        10.  கங்கை  நீராலும் ..................

      அபிஷேகம்   செய்யலாம்.  அவ்வாறு  செய்யும் பொழுது,  ஸ்ரீ ருத்ரம்  மற்றும் பஞ்ச சூக்தம் ( புருஷ சூக்தம் , ஸ்ரீ சூக்தம் , விஷ்ணு  சூக்தம், நாராயண  சூக்தம் , துர்கா  சூக்தம் ) பாராயணம்   செய்யலாம்.

          இவற்றுடன்  அந்ததந்த  உபாசனை   மூர்த்திகளின்  ஸஹஸ்ரநாமங்களோ,  அல்லது  அஷ்டோத்ரங்களோ  பாராயணம்  செய்யலாம்.  மேலும்  விருப்பமான  ஸ்துதிகள்,  ஸ்தோத்ரங்கள்   பாராயணம்  செய்வது   சாலச்சிறந்தது.

அபிஷேகம்  முடிந்தவுடன்  மடி  வஸ்திரத்தால் (தூய்மையான  துணியால் )  துடைத்து  சந்தனம், குங்குமம் ....விபூதி  இட்டு ,.......ஆசனம், பாத்யம்,  அர்க்யம் , ஆசமனம்   செய்து ......... துளசி , வில்வம் , மலர்களால்  அர்ச்சித்து ,  தூப , தீப ,நைவேத்யம்   செய்து.........

       ஸ்நானம்,  கந்தம் , புஷ்பம் ............கற்பூர நீராஞ்சனம்   என  பூஜா  புத்தங்களில் விவரித்துள்ளதை  போல  அர்ச்சனைகள்  செய்து ஆனந்திக்கலாம்.

             சாளக்கிராமம்   உள்ள  வீடு  பாடல் பெற்ற   தலத்தின்  சிறப்பினைக்  கொண்ட புண்ய  க்ஷேத்ரம். 12  சாளக்கிராமம்  கொண்ட  வீடு  ஒரு  திவ்ய தேசம்
ஆகும்.  அங்கு  லக்ஷ்மி  நித்ய வாசம்  செய்கிறாள். மேலும்   பாவங்கள்  குறைந்து  அழிந்து விடும்.      

            மஹாபெரியவா   ஒருமுறை,  " எங்கு   சாளக்கிராம  பூஜை  நடைபெறுகிறதோ,  அங்கு   ஒரு  குறையும்  வருவதில்லை.  அதைச்சுற்றி  சுமார்  2km  தூரத்திற்குள்  உயிர் விடும்  எந்த   உயிரினமும், அதன்  கடைசி   நேரத்தில்  அந்த  புண்ணிய  பூஜையின்  அதிர்வுகளை  பெற்று.........வாசனைகளும் , வினைகளும்   குறைந்து   சாந்தியாக,  அமைதியடைந்து   அதனால்   அதன்  மறுபிறவி  மிக  சிறந்ததாக  அமையப்  பெறுகின்றன " என்று   கூறி இருக்கிறார்  . மேலும்  அந்த   வீட்டிலுள்ளோர்கள்  கொடிய  மரணம் , மோசமான  விபத்துகள் ,  துர்மரணம்   போன்றவை   சாளக்கிராம  பூஜை  நடைபெறும்   வீட்டில்  நிகழ்வதில்லை.

       தமிழ்    திவ்யப்  பிரபந்தங்கள்  முதலியன   பாடி , அபராத  சமரோபணம்  செய்து,  நமஸ்கரித்து, அபிஷேக தீர்த்தம் , நைவேத்ய  பிரசாதம் வீட்டில்  எல்லோருக்கும்  கொடுத்து, நாமும்   தீர்த்தம்  பருகி , பிரசாதம்  உண்டு ,  ஆராதனக்ரமம்  செய்து  பூஜையை   முடித்துக்  கொள்ளலாம்

♥️சாளக்கிராம கற்களின் நிறங்களும் வடிவங்களும் அதன் பலன்களும்♥️
    
                முழுவதும் சிவப்பு நிறத்தில் இருக்கக்கூடியவை, நரசிம்ம அம்சம் உள்ளவையாக கருதப்படுகிறது. மோட்ச பிராப்தியை தரக்கூடியதாக இருப்பதால், இவற்றை பெரும்பாலும் வீடுகளில் வைத்து வழிபடுவது இல்லை.
    
                 சக்கர வடிவத்தில், கருப்பு வண்ணத்தில் இருக்கும் சாளக்கிராம கற்கள், ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை தரக்கூடியதாகும்.
    
                 முன் பக்கத்தில் பாம்பு போன்ற தோற்றத்துடன், தங்க நிற ரேகைகள் அமைந்த கற்கள், வாமதேவ அம்சமாகும். இவற்றை வழிபட்டால் பல நன்மைகள் வந்து சேரும். 
    
                  இடப்புறமாக பச்சை நிறம் பொருந்திய கற்கள், சகல பாவங்களையும் போக்கக் கூடியதாக கருதப்படுகிறது.
    
                   வட்ட வடிவத்தில் இருக்கும் சாளக்கிராம கற்களை, வீடுகளில் வைத்து வழிபடுபவர்களுக்கு செல்வ வளம் குறையாமல் இருக்கும். 
    
                     குடை போன்ற வடிவம் உடைய கல்லை வைத்து வணங்கி வருபவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும்.
 
                     சக்கர அமைப்பு அல்லது பாம்பு தலை போன்ற அடையாளங்களுடன் உள்ள சாளக்கிராம கற்களானது, பல்வேறு நிறங்களில் இருந்தால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படும். அத்தகைய கற்களை வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
    
                        நீல நிறமாக உள்ளவை ஸ்ரீகிருஷ்ண அம்சம் பொருந்தியவையாக இருப்பதால், அதை வணங்குபவர்கள் செல்வமும், சுகமும் அடைவார்கள்.
    
                       பச்சை நிறத்தில் இருக்கும் சாளக் கிராமமானது ஸ்ரீநாராயண அம்சத்துடன் இருப்பதோடு, வழிபடுவோருக்கு பலத்தையும், தைரியத்தையும் வழங்கக்கூடியது.
    
                      வாசு தேவ அம்சம் கொண்டதாக இருக்கும் கற்கள் வெண்மையாக இருப்பதோடு, ஞானம், பக்தி மற்றும் மோட்சம் ஆகிய பேறுகளை தருவதாக ஐதீகம்.
    
                         கருப்பு நிறத்தில் உள்ளவை விஷ்ணுவின் அம்சமாக இருந்து பெயர், புகழ், பெருமை ஆகியவற்றை அளிக்கும்.
    
                       
🌺சாளக்கிராமத்தின் தெய்வீக சக்தி 🌺

           உண்மையான சாளக்கிராம கல்லுடன் பால் அல்லது அரிசியை குறிப்பிட்ட நேரம் வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியிருக்கும். எதிர்மறை எண்ண அலைகளை,  அதிர்வுகளை உட்கிரகிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை உணரலாம். 

         வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி.சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கர ரேகைகள் இருந்ததால் சிறப்பாகும்.  சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய வீடுகளை 108 திவ்வியதேசத் தகுதியில் வைத்து பாவிக்க வேண்டும் என்பர் .  12 சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலச் சொத்தாக கருதுவர். சாளக்கிராமத்தை காலை , மாலை இருமுறை வழிபடுதல் வேண்டும். சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில் அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட அவதாரம் எடுத்த திருமால் வாழும் இடமாக கருதப்படுகின்றன.  வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.

வஜ்ர கிரிடம்சாளக்ராம மகிமை.....!!!

வைதீகமான குடும்பங்களில் தொன்றுதொட்டு பூஜிக்கப்பட்டும் மிகவும் உயர்ந்ததாகக் கருதப்பட்டும் வருவது சாள க்ராமம். 

இது உருளைவடிவமாயும், மிகவும் மிருதுவாயும், கரிய நிறமாயும் அல்லது சிவப்பு நிறமுடையதாயும் இருக்கும். இதை மிக பத்திரமாய் பூஜை பெட்டியில் வைத்திருப்பார்கள். 

தலைமுறை, தலைமுறையாக வழி, வழியாக குடும்பத்தில் ஒருவர் பின் ஒருவராக இதனை பெற்று ஆராதித்து வருகிறார்கள் என்பதே இது எவ்வளவு புனிதமானது, மதிப்பிற்குரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை விளக்கும். 

இது கன்னிகாதானத்தின் போது, கன்னிகையுடன் வரனுக்கு தானம் செய்யப்படுவதும் உண்டு.

சாளக்ராமசிலா என்பது விஷ்ணு அம்சம் உடையது. இதனுடைய மந்திரத்திற்கு ரிஷி ஸ்ரீபகவான். தேவதை நாராயணன். 

சாளக்ராமம் நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் கிடைக்கக்கூடிய ஒருவிதமான கல். 

கண்டகி நதிக்கு வடக்கிலும் ஹிமாசலத்திற்கு தெற்கிலும் பத்து யோஜனை விஸ்தீர்ணமுள்ள சாளக்ராமம் என்ற புண்ணிய பூமியுள்ளது. 

இங்கு துவாரவதி சாளக்ராமத்தில் ஒன்று கூடுகிறது. 

மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்தலம் இது என்பதில் சந்தேகமே கிடையாது. 

முக்திமதி அல்லது முக்திக்ஷேத்ரம் என்று சொல்லப்படுவது காட்மாண்டுவிலிருந்து 140 மைல் தொலைவில் இருக்கிறது.

இதையே சாளக்ராம க்ஷேத்ரம் என்றும் கூறுவர். இவ்வாறு பவிஷ்யோத்தர புராணம் கூறுப்பட்டுள்ளது.

சாளக்ராமத்தைப் பற்றிய ஒரு கதை பின்வருமாறு:

பிரம்மனது வியர்வைத் துளியினின்று கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். 

அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். 

அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். இது முடியாது என்பதால் தேவர்களை பூமியில் புழுக்காளாகும் படி சபித்தாள். கோபமடைந்த தேவர்கள் அவளை ஒரு ஜடமாக ஆக சபித்தனர். 

இதனால் கலங்கிய  ப்ரம்மா இந்திரனையும், ருத்ரனையும் அணுகி அவர்களது பரிஹாரம் கிட்டமுடியாமல், விஷ்ணுவை அண்டினார். 

இரு சாபங்களையும் அகற்ற இயலாது என்று கூறி விஷ்ணு ஒரு உபாயம் கூறினார். 

சாளக்ராம க்ஷேத்ரத்தில் சக்ர தீர்த்தத்தில் தான் வாசம் செய்வது என்றும் அங்கு தேவர்கள் வஜ்ர கீடம் என்ற புழுக்களாகி அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டியது என்றும் கண்டகி என்பவள் ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும் என்றும் ஏற்பாடாகியது. 

அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியனவே சாளக்ராம கற்கள். 

பத்ரிநாத்திலுள்ள பிம்பங்கள் சாளக்ராமத்தினால் ஆனவை. 

சாளக்ராமத்தை கோர்த்து மாலையாகவும் பிம்பங்களுக்கு அணிவிக்கலாம். 

சாளக்ராமம் உடைந்திருந்தாலும், ஸ்வரூப அழிவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும், அதற்கு ஒரு தோஷமும் இல்லை. 

அது குற்றமற்றது. 

சாளக்ராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு பூஜா விவரணங்களோ தேவையில்லை. 

அது இருந்தாலே சந்துஷ்டியை கொடுக்கவல்லது. 

சாதாரணமாக புருஷ சூக்த மந்திரத்தால் பூஜிப்பார்கள். 

அது சிரார்த்த காலங்களில் இருக்க வைப்பது பிதுர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும். 

சாளக்ராம அபிஷேகதீர்த்தத்தை சிரஸில் தெளித்துக் கொண்டு அதை அர்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்ண வேணும். 

இது வைகுண்ட வாசத்தைக் கொடுக்க வல்லது. 

சாளக்ராம அபிஷேக ஜலத்தை கீழே கொட்டக்கூடாது. 

இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. 

இவை நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

பலவித வடிவங்களில் உள்ள சாளக்கிராமங்கள் அவற்றில் பதிந்துள்ள உருவம், அமைப்பு இவற்றிற்கேற்ப திருமாலின் பல அவதாரங்களாக பெயரிடப்படுகின்றன. 

எடுத்துக்காட்டாக சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் கேசவம் என அழைக்கப்படுகின்றன.

இவ்வாறாக கேசவம், மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், ஸ்ரீதரம், ரிஷிகேசம், பத்மநாபம், தாமோதரம், ஷங்கர்ஷனம், பிரத்யும்னம், நரசிம்மம், ஜனார்த்தனம், ஹரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. 

பண்டைய காலத்தில், மன்னர்களின் சபைகள், ஊர் சபைகள் ஆகியவற்றில் வழக்குகளில் சாட்சி சொல்லும் போது சாளக்கிராமத்தைக் கையில் கொடுத்து 'சாளக்கிராம சாட்சியாக' சாட்சி சொல்லும் வழக்கம் இருந்தது. 

மரண காலத்தில் சுயநினைவுடன் சாளக்கிராமத்தை மனதால் வணங்குபவன் பாவங்களில் இருந்து விடுபடுகிறான் என்றும், இறக்கும் போது சாளக்கிராம தீர்த்தத்தின் ஒரு துளி தீர்த்தத்தை அருந்தி உடலை விடுவோர் வைவஸ்வதம் என்ற தர்மராஜரின் நகரில் யமதர்மராஜனால் மரியாதை செய்யப்பட்டு புண்ணிய உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

கண்டகி என்னும் புண்ணிய ஆற்றில் நீராடி முக்தி நாதனை பக்தியுடன் வழிபடுபவன், பூவுலகில் சுகமாக வாழ்ந்து பின்னர் வைகுண்டத்தில் தன்னுடன் இருப்பதாக விஷ்ணு கூறுவதாகக் கூறப்பட்டுள்ளது. 

சாளக்கிராமம் உள்ள வீடு வைகுண்டத்திற்கு சமம் என்று பத்மபுராணம் கூறுகிறது. 

சாளக்கிராம திருமஞ்சன தீர்த்தம் கங்கா தீர்த்தத்தைவிட உயர்ந்தது என்று ஸ்ரீ சாளக்கிராம தத்துவ முக்தாவளி எனும் நூல் கூறுகின்றது.

Friday, 10 August 2018

Incidents in the Life of Swamy Ramanuja

Sri:

Many incidents in the Life of Swamy Ramanuja were held when his age was being in the multiples of 2 examples

2 x 8 = 16th year – Swami got married & entered gruhasta ashram in (1033 AD)

2 x 9 = 18th year – Swamy accompanied by his guru Yadhava Praksha went to Kasi yatra in (1035 AD)

2 x 16 = 32nd year – Swamy under took Sanyasa ashramam at Kanchi & became “Yathiraja” in (1049 AD)

2 x 32 = 64th year – Swamy won over Yagna moorthy after 18
days debate in (1081 AD),and gave him the title “Arulala perumal Emperumanaarwho gave us Gyana saaram & Prameya saram

2 x 35 = 70th year – Swamy along with Koorthalwan in(1087 A D) and others travelled to Kashmir to get the “Bodhayana Vritti” to author Sri Bashyam

2 x 36 = 72nd year – Swamy Ramanuja blessed us with “Sri
Bashyam”, “Geetha bashyam”,”Vedantha saram”, “Vedantha
Deepam”and “Vedanthasangraham”.& also started his divya desam Yatra in (1089 AD)

2 x 37 = 74th year – Swamy became acharya to “Thirukurungudi Nambi” and named the lord as “Vaishnava Nambi” & established “Ramanuja Matam” there in (1091 AD)

2 x 38 = 76th year – Swamy got his titile as “Bhashyakarar” from Sri Saraswathi Devi (1093 AD )

2 x 40 = 80th year – Swamy Ramanuja leaves Sri Rangam,(1097 A D) due to Kirumi Kanda Chozan and travels to Karnataka(Mel Naadu)

2 x 41 = 82nd year – Swamy Ramanuja with the help of the KingVishnu Vardhan located the moolavar lord Thirunarayanan in the year Bagudhanya (1099 AD) & performed consecration at
Melkote.

2 x 50 = 100th year – Swami Ramanuja with Mudaliandan in the year Helavilambi (1117 A D ) did Pancha Narayana Pratishtai which constitute Keerthi Naryanan, Nambi Narayanan, Veera Narayanan, Sowmya Narayanan & Kesava Naryanan

2x 60 = 120th year – Swamy Ramanuja completed his task inthisBhooloka, and entered the eternal abode Sri Vaikuntam, on the Pingala Year (1137 AD)


Adiyen Ramanuja Dasan

Sri Panchayuda Sthotram _ ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்:


ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம்:

தினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள் நண்பர்களே!
திருமாலின் திருக்கரங்களிலுள்ள பஞ்ச ஆயுதங்கள் உங்களுக்குத் தேனான வாழ்வு கிட்டச் செய்யும். திருமாலின் திருவருளும், அதனால் திருமகளின் அருளும் உங்கள் இல்லம் வந்து சேரும்.
குடும்பத்தில் நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் நிலைக்கும். எதிரிகள் சக்தியிழப்பர்.

1) சுதர்சனம் - சக்கரம்

ஸ்புரத் ஸஹஸ்ரார ஸுகாதி தீவ்ரம்
ஸுதர்ஸநம் பாஸ்கர கோடி துல்யம்மி
ஸுரத்விஷாம் ப்ராணவிநாஸி விஷ்ணோ:
சக்ரம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே!

தீச்சுடரைப் போல பல மடங்கு ஒளி விட்டு பிரகாசிப்பதும்,
வல்லமை பொருந்தியதும், 
கோடி சூரியர்களின் கதிர்கள் ஒன்றாகத் திரண்டது போலப் பிரகாசமானதும், அசுரர்களை நாசப்படுத்துவதுமான ஸ்ரீவிஷ்ணு பகவானின் சுதர்சனம் என்னும் சக்கரத்தைப் போற்றி வணங்குகிறேன்.

2) பாஞ்சஜன்யம் - சங்கு

விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய
யஸ்யத்வநிர் தானவ தர்ப்பஹந்தா:
தம் பாஞ்ச ஜன்யம் சசி கோடி சுப்ரம்
சங்கம் ஸதா அஹம் சரணம் ப்ரபத்யே!

மகாவிஷ்ணுவின் பவளச் செவ்வாய் வழியே வெளி வரும் காற்றினால் ஒலி எழுப்பப்படுவதும், தனது கம்பீர ஓசையால்
அசுரர்களுக்கு அச்சத்தைக் கொடுக்கக் கூடியதும், வெண்மை வண்ணத்தில் ஒரு கோடி நிலவுகளின் ஒளிக்கு ஈடானதுமான பாஞ்சஜன்யம் என்ற சங்கை எப்போதும் சரணமடைகிறேன்.

3) கௌமோதகம் - கதை

ஹிரண்மயீம் மேரு ஸமான ஸாரம்
கௌமேதகீம் தைத்ய குலைக ஹந்த்ரீம் வைகுண்ட வாமாக்ரகரா பிம்ருஷ்டாம்
கதாம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

பொன்மயமான மேரு மலையைப் போன்ற ஒளியுள்ளதும், அசுரர்களின் குலத்தையே அழிக்கக் கூடியதும், வைகுண்ட வாசனின் கைநுனிகளின் ஸ்பரிச பாக்யம் பெற்றதான கௌமோதகம் என்ற கதையை சதா சரணமடைகிறேன்.

4) நந்தகம் - வாள்

ரக்ஷோ ஸுராணாம் கடிநோக்ர கண்டச்
சேதக்ஷரச் சோணித திக்ததாரம்
தம் நந்தகம் நாம ஹரே ப்ரதீப்தம்
கட்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

கொடிய அரக்கர்களின் கழுத்தைத் துண்டிப்பதால் பிரவாகிக்கும் ரத்தத்தில் மூழ்கி, செந்நிற ஒளியுடன் காட்சி தரும் நந்தகம் எனும் பெயருடைய வீர வாளை என்றும் சரணமடைகிறேன்.

5) சார்ங்கம் - வில்

யஜ்ஜ்யாநீ நாத ஸ்ரவபணாத் ஸுராணாம்
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய:
பவந்தி தைத்யாஸநி பர்ணவர்ஷ
ஸார்ங்கம் ஸதாஹம் சரணம் ப்ரபத்யே

தேவர்களின் மனதிலிருந்து அச்சத்தைப் போக்குவதும், எதிரிகளை அச்சுறுத்துவதுமான நாணோசை உடையதும், மின்னல் ஒளி வேகத்தில் அம்புகளை மாரியாகப் பொழியக்கூடிய வல்லமை மிக்கதுமான சார்ங்கம் என்னும் வில்லை எப்போதும் சரணமடைகிறேன்.

இமம் ஹரே: பஞ்சமஹாயுதாநாம
ஸ்தவம் படேத் யோ அநுதிநம் ப்ரபாதே
ஸமஸ்தது:காநி பயாநிஸத்ய:
பாபாநி நஸ்யந்தி ஸுகாநி ஸந்தி

உயர்வானவையும் பரந்தாமனின் கரங்களில் இருக்கும் பாக்யத்தைப் பெற்றவையுமான பஞ்ச மகா ஆயுதங்களைப் போற்றும் இந்தத் துதியை தினந்தோறும் படித்து வணங்குபவர்களும் அதைக் கேட்பவர்களும் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுபட்டு சகல பாக்யங்களையும் அடைகின்றனர்.

வநேரணே சத்ரு ஜலாக்நிமத்யே
யத்ருச்சயா பத்ஸு மஹாபயேஸுமி
இதம் படன் ஸ்தோத்ர நாகுலாத்மா
ஸுகிபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ:

வனங்களிலும் யுத்த யூமியில் சத்ருக்களின் மத்தியிலும், எதிர்பாரா விபத்துகளின் போதும், அதீத பயத்தின் போதும் இந்தத் துதியைச் சொன்னாலும் படித்தாலும் ஆபத்துகளிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் அடைவர்.

DNA and Mathematics in Sri Rudram

DNA and Mathematics in Sri Rudram

Mathematics is a part of our daily life in several ways. Hence, it is no wonder that it has come to occupy an important place in religious rituals also. This is what we find particularly in the Hindu way of life or the Hindu religion.

In the Chamakam, in anuvakas or sections 1 to10, the devotee prays for almost everything needed for human happiness and specifies each item.

But in the 11th anuvaka or 11th section of Chamakam, the devotee prays for the desired things not specifically but in terms of numbers, first in terms of odd numbers from 1 to 33 and later in multiples of 4 from 4 to 48, as follows:

Eka cha me, 
thisrascha may, 
pancha cha may, 
sapta cha may, 
Ekadasa cha may, 
trayodasa cha may, 
panchadasa cha may, 
saptadasa cha may, 
Navadasa cha may, 
ek trimshatis cha may, 
trayovimshatis cha may, 
Panchavimshatis cha may, 
saptavimshatis cha may, 
navavimshatis cha may, 
Ekatrimshatis cha may, 
trayatrimshatis cha may, 
panchatrimshatis cha may, 
Chatasras cha may, 
ashtou cha may, 
dwadasa cha may, 
shodasa cha may, 
Vimsatis cha may, 
chaturvimshatis cha may, 
ashtavimshatis cha may, 
Dwathrimashatis cha may, 
Shatstrimshas cha may, 
chatvarimshas cha may, 
Chatuschatvarimshas cha may, 
ashtachatvarimshas cha may” which means:

“Let these be granted to me. One, three, five, seven, nine, eleven, thirteen, seventeen, nineteen, twenty one, twenty three, twenty five, twenty seven, twenty nine, thirty one and thirty three as also four, eight, twelve, sixteen, twenty, twenty four, twenty eight, thirty two, thirty six, forty, forty four and forty eight”.

Traditional scholars and Pandits explain the significance of these numbers as follows:

ODD NUMBERS:

1 = Nature or Prakriti
3 = The three gunas, namely sattwa, rajas and tamas
5 = The five mahabhutas, or the five basic elements, that is, prithvi, ap, tejas, vayu and akasha, (earth, water, energy or agni or fire, wind and space).
7 = The five sensory organs and the mind and intellect
9 = The nine openings in the human body, called the navadwaras.
11 = The ten pranas and the Sushumna nadi
13 = Thirteen Devas
15 = The nadis or nerve centres in the human body
17 = The limbs of the human body
19 = Medicinal herbs
21 = Important vulnerable parts of the body
23 = Devas controlling serious diseases
25 = Apsaras in heaven
27 = Gandharvas
29 = Vidyut Devas
31 = Worlds
33 = Devas

MULTIPLES OF FOUR:

4 = The four ideals of human life, namely dharma, artha, kama and moksha,
(righteous way of life, wealth, desire, and salvation)
8 = The four Vedas and the four upavedas
12 = Six vedangas and six shastras.
16 = Knowledge to be obtained from God
20 = The Mahabhutas
24 = The number of letters in the Gayatri mantra.
28 = The number of letters in the Ushnik mantra.
32 = The number of letters in the Anushtup mantra.
36 = The number of letters in the Brihati mantra.
40 = The number of letters in the Pankti mantra.
44 = The number of letters in the Trushtup mantra
48 = The number of letters in the Jagati mantra

According to Dr Sasidharan, these numbers represent a polymer chain of molecules that form apa or water that enables evolution of life and intelligence, and apa is nothing but the nitrogenous base pairs of the DNA.

The numbers 1 to 33 represent the 33000 base pairs of mitochondrial base pairs of DNA.

The numbers 4 to 48 represent the 48 million nuclear bases of DNA.

The two sets of DNA bases combine to provide sustenance of human well being and onward evolution of human life.

When the devotee prays for the blessing of these numbers, actually he is praying for bestowing on him all these DNA bases which conduce to sustenance of human well being.

Sunday, 8 July 2018

SRI:

🕉

Sapthaswara's are considered as the 7 Gods.

SA  -is Agni
RE  - is Brahma
GA  -is Saraswathi
MA - is Shiva
PA  -is Vishnu
DHA - is Ganesha
NI - is Surya 

Every Raga is a medicine, Every Raga is a Mantra, Every Raga Have healing powers. Yes Ragas cure our health problems.Let us see the different Ragas and how it works in out for our body :-

Raga's and its Spiritual Healing Powers

01. Ahir Bhairav -Gives free relaxed feeling and mitigates dust allergies and skin disease. Good for arthritis conditions

02. Amrutavarshini - Ushana vyathi nasini ( alleviates diseases related to heat)

03. Ananda Bhairavi - Supresses stomach pain in both men and women. Reduces kidney type problems. Controls blood pressure

04. Bagesri - Helps in attaining Guru's grace. Arouses a feeling of darkness, stability, depths and calmness. This raga is also used in treatment of diabetes and hypertension.

05. Bhairavi - Reduces anxiety, pressures, skin, disease, allergies

06. Bhupala - To awaken someone out of deep sleep

07. Charukesi - 26th raga in the melakarta scale (parent) of the south Indian classical music. Rejuvenates the mind helping one to age gracefully. It enlivens the singer and listener.

08. Desh - The suppression of the senses releases a negative force. The process of sublimation needs a spiritual path. Rag Desh can provide that. Its energy gives the listener serenity, peace, inner joy, right valor, universal love and patriotism

09. Dwijavanti - Quells paralysis and sicorders of the mind

10. Ganamurte - Helpful in diabetes

11. Hamsadhwani - Energy giving. Provides good thinking, chaitanya. Sarvarogaharini (panacea)

12. Hemavati - Good for joint and back pain

13. Hindolam - Improves digestive power. Cures stomach related. problems

14. Kalyani - Gives energy and removes tension and acts as general tonic. Dispels the darkness of fear; Gives motherly comfort and increases confidence. Kalyani means mangalam. Recited with faith and devotion, it is believed to clinch marriage alliances. Many authentic reports exist about the raga's power to destroy fear in many forms: fear of poverty, of love, of power, of ill-health, of death, and so on.

15. Kapi - Sick patients get ove their depression, anxiety. Reduces absent mindedness

16. Karaharapriya - Curative for heart disease and nervous irritablility, neurosis, worry and distress.

17. Kedaram - Gives energy and removes tension

18. Keervani - Promotes dhyana (meditation) at mental and physical levels

19. Kokilam - Helps to prevent stone formation, burning sensations, sleeplessness and anxiety.

20. Madhuvarshini - Good for nerves. Cures diseases like slight headache, sleeplessness, and sinus problems.

21. Madhyamavati - Clears paralysis, giddiness, pain in legs/hands, etc. and nervous complaints

22. Malaya Maruta -To awaken someone out of deep sleep

23. Maya Malava Gowla - Counters pollution. It can be called the Gateway to Carnatic music. The history of Camatic music says that the blessed musician, Purandaradasar, introduced the system of Mayamalava gowla. This raga has the power to neutralize toxins in the body. Practicing it in the early hours of the morning, in the midst of nature will enhance the strength of the vocal chords.

24. Mohanam - Mohanam is present where beauty and love coexist. It filters out the ill-effects of kama (desire for sex) , krodha (anger) and moha (lust), bestowing immense benefits on the listener. Also said to sures chronic headaches, indigestion, and depression.

25. Neelambari - To get rid of insomnia & to get good sleep and mental peace

26. Ranjani - Cures kidney disease

27. Rathipathipriya - Adds strengh and vigor to a happy wedded life. This 5-swara raga has the power to eliminate poverty. The prayoga of the swaras can wipe off the vibrations of bitter feelings emitted by ill will

28. Rohini - Cures back pain, joint pain, etc.

29. Sama - Makes mind sober, tranquil, induces good sleep. Good for world peace.

30. Saramati - Elevates from depressed state. Cures balagraha dosham in children ( undiagnoses crying and imitability). For sleeplessness, itching, eye and ear problems, skin problems, and the problems of hearing irregular sounds

31. Sindu Bhairavi - Removes sins and sorrows and saves from unforesenn events

32. Sivaranjani -Powerful raga for meditation; bestows benevolence of God. Removes sadness, ushana roga santi (diseases related to excess heat). Good for general health

33. Sandhya Kalyani - Cures ear, nose and eye diseases. Relieves chronic clods. Gives good sleep and freshness

34. Shankarabharanam - The power of this raga is incredible. It cures mental illness, soothes the turbulent mind and restores peace and harmony. If rendered with total devotion for a stipulated period, it can cure mental disorders said to be beyond the scope of medical treatment. It also is said to have the power to shower wealth.

35. Shanmugapriya - Sharpens the intellect of the singer as well as the listener. Instills courage in one's mind and replenishes the energy in the body.

36. Subhapantuvarali - Alleviates mental dilemmas and indecisiveness

37. Suddha dhanyasi - Remover of sorrows. Gives a happy feeling. Tonic for nerves. Cures rhinitis and migraine.

38. Suruti - Mitigates stomach burn, insomnia, fear, disgust

39. Vakulabharanam - Alleviates asthma, bronchitis, heart disease, depression, skin disease and skin

40. Varali - Varali is good for vayu tatva, heart, skin ailments and gastric problems.

41. Vasanta / Vasanti - Controls high and low blood pressure, cures heart as well as nervous diseases. Can dear the fog of confusion when a series of medical tests has to be analysed. It heals nervous breakdowns.

42. Vasantha - Cures paralysis

43. Viswambari - General tonic, acts quickly

44. Raga Pooriya Dhansari (Hamsanandi-Kamavardini ) – evokes sweet, deep, heavy, cloudy and stable state of mind and prevents acidity..

45. Raga Darbari (Darbari Kanada) – is considered very effective in easing tension. It is a late night raga composed by Tansen for Akbar to relieve his tension after hectic schedule of the daily court life.

46. Raga Todi – give tremendous relief to patients of high blood pressure.

47. Raga Malkauns – helps to cure low blood pressure.

48.  Raga Malhar – Useful in the treatment of asthma and sunstroke.

49. Raga Hindol & Marava – These ragas are useful in blood purification.

50. Varali - Varali is good but for vayu tatva, heart, skin ailments and gastric problems.

51. Yamuna Kalyani - Gives freshness and dynamism

--Dasan

Thursday, 14 June 2018

SRI:

*திருவாய் மொழியில் நாராயண சப்த பிரயோகங்கள்*


வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே -1-2-10-

அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே -1-3-3-

ஓன்று எனப் பல வென அறிவரும் வடிவினுள் நின்ற நன்றெழில் நாரணன் -1-3-7-

நாரணனைக் கண்டக்கால் --மல்கு நீர்க் கண்ணேற்கு ஓர் வாசகம் கொண்டு அருளாயே  -1-4-5-

நாடாத மலர் நாடி நாடொறும் நாரணன் தன் வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று -1-4-9-

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும் மல்கும் கண் பனி நாடுவன் மாயமே -1-10-8-

தோற்றோம் மட நெஞ்சே எம்பெருமான் நாரணற்கு -2-1-7-

கேசவன் தமர் கீழ் மேல் எமர் ஏழு ஏழு பிறப்பும் மா சதிர் இது பெற்று நம்முடை வாழ்வு வாய்க்கின்றவா -நாரணனாலே -2-7-1-

நாரணன் முழு ஏழ் உலகுக்கும் நாதன் வேத மயன் காரணம் கிரிசை கருமம் இவை முதல்வன் எந்தை -வாரணத்தை மருப்பு ஒசித்த பிரான் 2-7-2-

திரு நாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்மினோ - 4-1-1-

நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே உன் ஆகமுற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே  -4-3-3-

ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே -4-3-6-

நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும் -4-4-2-

நன்று பெய்யும் மழை காணில் நாரணன் வந்தான் என்று ஆலும் -4-4-4-

நாறு துழாய் மலர் காணில் நாரணன் கண்ணி ஈது என்னும் -4-4-7-

ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தீ நாராயணா என்று என்று காலம்தோறும் யான் இருந்து கைத்தலை பூசலிட்டால் -4-7-1-

திருவடியை நாரணனைக் கேசவனைப் பரஞ்சுடரை திருவடி சேர்வது கருதி -4-9-11-

மார்க்கண்டேயன் அவனை நக்கபிரானும் அன்று உய்யக் கிளிண்டது நாராயணன் அருளே  -4-10-8-

தெய்வ நாயகன் நாரணன் திரிவிக்ரமன் அடியிணை மிசை -குருகூர்ச் சடகோபன் செய்த ஆயிரத்துள் -5-8-11-

தொல்லருள் நல்வினையால் சொலக் கூடுங்கொல்--நம்பெருமான் நாராயணன் நாமங்களே -5-9-10-

நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆளன்றி ஆவரோ -7-5-2-

மால் அரி கேசவன் நாரணன் சி மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று ஓலமிட்டு என்னைப் பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான் -8-2-7-

அற்புதன் நாராயணன் அரி வாமனன் நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம் - திருக் கடித்தானாமே -8-6-10-

ஓராயிரம் உலகு ஏழு அளிக்கும் பேராயிரம் கொண்டதோர் பீடுடையன் காராயின காள நன் மேனியினன் நாராயணன் நங்கள் பிரான் அவனே -9-3-1-

நாவாய் யுறைகின்ற என் நாரண நம்பீ ஆவா வடியான் இவன் என்று அருளாயே -9-8-7-

கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே -10-5-1-

நாரணன் எம்மான் பார் அணங்கு ஆளன் வாரணம் தொலைத்த காரணன் தானே -10-5-2-

பாட்டாய பல பாடிப் பல வினைகள் பற்று அறுத்து நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே -10-6-2-

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி  -10-6-3

வாழ் புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே  -10-9-1-

நாரணன் தமரைக் கண்டு உகந்து -எங்கும் தொழுதனர் உலகே -10-9-2-



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்